மறைந்த விஜயகாந்திற்கு தாராபுரத்தில் அனைத்து கட்சியினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்

தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மறைந்த தே.மு.தி.க தலைவரும் முன்னாள் நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



நிகழ்வில் மறைந்த விஜய்காந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



முன்னதாக பெரியார் திடலில் இருந்து புறப்பட்ட மௌன ஊர்வலம் சி.எஸ்.ஐ ரோடு தினசரி காய்கறி மார்க்கெட் சாலை உடுமலை சாலை பெரிய கடைவீதி வழியாக அண்ணா சாலையில் ஊர்வலம் நிறைவு அடைந்தது.



தே.மு.தி.க நகரச் செயலாளர் ஷானவாஸ், மற்றும் தி.மு.க, அதிமுக, பா.ஜ.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ். ம.தி.மு.க, திராவிட கழகத்தினர், தமிழ் புலி கட்சியினர், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பி.எஸ் அணியினர், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் முன்னேற்ற கழகம், விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...