மறைந்த விஜயகாந்திற்கு தாராபுரத்தில் அனைத்து கட்சியினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்

தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மறைந்த தே.மு.தி.க தலைவரும் முன்னாள் நடிகர் சங்க தலைவருமான விஜயகாந்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



நிகழ்வில் மறைந்த விஜய்காந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



முன்னதாக பெரியார் திடலில் இருந்து புறப்பட்ட மௌன ஊர்வலம் சி.எஸ்.ஐ ரோடு தினசரி காய்கறி மார்க்கெட் சாலை உடுமலை சாலை பெரிய கடைவீதி வழியாக அண்ணா சாலையில் ஊர்வலம் நிறைவு அடைந்தது.



தே.மு.தி.க நகரச் செயலாளர் ஷானவாஸ், மற்றும் தி.மு.க, அதிமுக, பா.ஜ.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ். ம.தி.மு.க, திராவிட கழகத்தினர், தமிழ் புலி கட்சியினர், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பி.எஸ் அணியினர், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் முன்னேற்ற கழகம், விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...