உடுமலை அருகே மதுபான கடை அமைக்க எதிர்ப்பு - குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

புதிய மதுக்கடை அமைத்தால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள பொள்ளாச்சி சாலையில் தனியார் இடத்தில் அதிநவீன குளிர்சாதன மதுபான கூடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெதம்பட்டியில் நால்ரோடு பகுதி சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ளது.



மேலும் இப்பகுதியில் பள்ளிகள், கோவில்கள், வணிக நிறுவனங்கள், பொள்ளாச்சி தாராபுரம் தேசிய நெடுச்சாலை அமைந்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள அரசு மதுக்கடைகளால் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.



தற்பொழுது மீண்டும் கூடுதலாக அரசு மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி துறை அதிகாரியிடம் மனு வழங்கினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாகும். இப்பகுதியில் அரசு மதுபான கடை இருந்தால் விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...