புத்தாண்டை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அருவியல் குவிந்துள்ளனர்.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வால்பாறை சாலையில் ஆழியார் அணை ஒட்டி அமைந்துள்ளது குரங்கருவி எனப்படும் கவியரவி. இந்த அருவி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

தற்போது தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை, மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் உள்ள ஆழியார் குரங்கு அருவி என்று அழைக்கப்படும் கவியருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்று புத்தாண்டை முன்னிட்டு அதிகரித்து காணப்படுகிறது.



இந்த நிலையில் இன்று கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியல் குவிந்துள்ளனர்.



மேலும் அருவியில் கொட்டி வரும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குளித்து உற்சாகமடைந்தனர்.



ஆனால் கவியருவியில் தடுப்பு சுவர் கம்பி போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதால் அச்சத்துடன் அருவியில் குளிக்கும் நிலை இருப்பதாகவும், எனவே தடுப்பு கம்பிகள் அமைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் வால்பாறை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...