ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆறு ஆக்கிரமிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் ஆய்வு

கோவை, திருப்பூர் மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் நொய்யல் ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, சின்னாறு, பெரியாறு என பல கிளை ஆறுகளும், சிற்றாறுகளும் கூடுதுறையில் சங்கமமாகி, நொய்யல் உருவெடுக்கிறது.

ஒரு காலத்தில், கொங்கு மண்டலத்தில் உயிர்களுக்கும், பயிர்களுக்கும் ரத்தநாளமாய் விளங்கிய நொய்யல், கடந்த கால் நுாற்றாண்டு காலத்தில், ஆக்கிரமிப்புகளாலும், ஆலைக்கழிவுகளாலும் இருந்த தடமே மறைந்துபோய் கொண்டிருக்கிறது.

நொய்யலின் வழித்தடத்தை மறித்தும், குளங்களை மூடியும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், நொய்யலின் மறைவிற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்த விஷயத்தில், அரசுத்துறைகளே முன்னோடியாக விளங்கி, சாலை, பணிமனை என ஏராளமான கட்டமைப்புகளை குளத்தில் அமைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, குளங்களை பல்லாயிரக்கணக்கானோர் ஆக்கிரமித்து, வீடுகளைக் கட்டியுள்ளனர்.

இதனிடையே, ஆப்துப்பாலம் அருகே, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 86-வது வார்டு பூங்காநகர் பகுதியில் நொய்யல் நதியில் அத்துமீறி ஆக்கிரமிப்புபணி நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன.



இதனைத்தொடர்ந்து இன்று ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வடக்கு வருவாய் ஆய்வாளர் உமாபாரதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சகாபுதீன் என்பவருக்கு சொந்தமான இரும்புக்குடோன் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அக்குடோன் கட்டப்பட்டு வரும் பகுதியை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அந்நிலத்தினை சகாபுதீன் முறையாக வாங்கியுள்ளாரா அல்லது ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பதை விசாரிக்க அந்நிலத்தின் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளனர்.



இந்த ஆவணங்கள் மாநகராட்சி நில அளவையர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்பே நொய்யல் ஆற்றின் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் சையது நமது நிருபரிடம் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சகாபுதீன் என்பவர் ஆத்துப்பாலம் அருகே உள்ள பூங்காநகரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் நிலத்தினை ஆக்கிரமித்து தற்போது இரும்பு குடோன் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து சகாபுதீனிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது அவர் இந்நிலத்திற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளதாகவும், அந்நிலத்திற்கு அவர் பட்டா பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். 

நொய்யல் ஆறு பாதுகாப்பு சட்டவிதிகளின் படி அந்த ஆற்றுப்படுகையில் இருந்து ஐந்து மீட்டர் தூரம் வரை மாநகராட்சி வசமே இருக்க வேண்டும். ஆனால், தற்போது சகாபுதீன் நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டியே கட்டிடம் கட்டி வருகிறார். இதற்கு எவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருக்கும் என்பதில் சந்தேகம் எழுகிறது. 



அந்த ஆவணங்களை காண நான் கேட்டதற்கும், அரசு தரப்பில்இருந்து கேட்டால் மட்டுமே காண்பிக்க முடியும் என்றும், வேறு யாரிடமும் அதனை காண்பிக்க முடியாது என்றும் அவர் கூறுவது மேலும் சந்தேகத்தை வழுப்படுத்துகிறது.

தற்போது, நொய்யல் ஆற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை மட்டும் மாவட்ட நிர்வாகம் மீட்டுக்கொடுத்தால் போதும். எங்களது குழுவினரும், பூங்கா நகர் பகுதி மக்களும் இணைந்து அதனை தூர்வார தயாராக உள்ளோம்.



மேலும், இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் கவணத்திற்கு எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. நொய்யலின் ஆக்கிமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்" என ஓசை சையது கூறினார்.



Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...