குண்டடத்தில் உழவர் உற்பத்தியாளர் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்து செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஒன்றியத்தில் பொங்கலூர் உழவர் 36 நிறுவனத்தின் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சிவகாமி புவனேஸ்வரமூர்த்தி தலைமையில் குண்டடம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசன் மூர்த்தி, குத்து விளக்கு ஏற்றி உழவர் உற்பத்தியாளர் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியை குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூறுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளுக்கு பல எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.



இலவச மின்சாரம், மானிய விலையில் விவசாய உபகரணங்கள் வழங்குதல், இப்படி பல எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்து செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...