திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் 10 சவரன் நகை வழிப்பறி செய்த நபர் கைது

நகை பறிப்பில் ஈடுபட்ட திருப்பூர் பாவனி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகம்மாள் வயது 59. இவர் தனது குடும்பத்தார் 13 பேருடன், திருப்பதி செல்வதற்காக ( பிலாஸ்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும்) எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் சென்றுள்ளார். ரயிலானது திருப்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.

இதனிடையே ஜன்னல் ஓரமாக நாகம்மாள் அமர்ந்து, உறவினர்களுடன் பேசிகொண்டிருந்த போது இந்தசந்தர்ப்பத்தை பயண்படுத்தி, ரயில்வே நடைமேடையில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், நாகம்மாள் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நாகம்மாள் திருப்பூர் ரயில்வே இருப்புபாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கண்டறிந்தனர்.



தொடர்ந்து அந்த நபர் திருப்பூர் கொடிகம்பம் பவானி நகர் பகுதியில் இருப்பதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்க்கு சென்று நகை பறிப்பில் ஈடுபட்ட திருப்பூர் பாவனி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.



தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...