ஆவாரம்பாளையம் சாலையில் தார்சாலை அமைக்கும் பணி - நள்ளிரவில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் வெப்பத்தை வெப்ப அளவிடும் கருவி கொண்டு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைக்கப்படும் நீளம், அகலம் குறித்தும் கேட்டறிந்தார். புதியதாக அமைக்கப்படும் தார்சாலையின் தரத்தையும் அவர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 28, ஆவாரம்பாளையம் சாலையில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்(TURIP 2023-2024) ரூ 27. 97 லட்சம் மதிப்பீட்டில் 640 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணியை , நேற்று நள்ளிரவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தீடீர் ஆய்வு செய்தார்.



அப்போது தார் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் வெப்பத்தை வெப்ப அளவிடும் கருவி கொண்டு ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைக்கப்படும் நீளம், அகலம் குறித்தும் கேட்டறிந்தார். புதியதாக அமைக்கப்படும் தார்சாலையின் தரத்தை ஆய்வு செய்தார்.



அப்போது, மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு, மாநகராட்சி பொறியாளர் முருகேசன், உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, உதவி பொறியாளர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...