விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் - பறிமுதல் செய்த பொள்ளாச்சி அதிகாரிகள்

இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைத்து இருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும் என சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விற்பனைக்காக லாரியல் கொண்டு வரப்பட்ட பிளாஸ்ட்டிக் பொருட்களை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி பகுதியில், விற்பனைக்காக லாரியில் கொண்டு வரப்பட்ட, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி - கோவை ரோட்டில் நகராட்சி சுகாதார அலுவலர் சேகர் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சி.டி.சி., மேட்டில் கோவையில் இருந்து பொருட்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நகராட்சி பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. அதில், பொள்ளாச்சி பகுதியில் வினியோகம் செய்வதற்காக கோவையில் இருந்து, பிளாஸ்டிக் பேக், டம்ளர்கள், ஸ்பூன்கள், நான் ஓவன் பேக்ஸ், ஸ்ட்ரா போன்றவை கொண்டு வரப்பட்டன.

மொத்தம், 35 பண்டல்களில், 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு, அபராதம் விதிக்கப்பட உள்ளது. இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைத்து இருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் இல்லாத பொள்ளாச்சி நகராட்சியாக மாற்ற, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...