பாப்பம்பட்டி பகுதியில் நிலவிவரும் குடிநீர் மற்றும் சப்பைத்தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாப்பம்பட்டி பகுதியில் நிலவிவரும் கடுமையான குடிநீர் மற்றும் சப்பைத்தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி பாப்பம்பட்டி தி மு க ஒன்றிய துணை செயலாளர் பி.ஆர்.பரமசிவம், இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- 

பாப்பம்பட்டி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு என பில்லூர் குடிநீர் 1 லட்சத்து 65 லிட்டர் ஒதுக்கீடு செய்து உள்ளனர். அனால் கடந்த மூன்று வருடகாலமாக சுமார் 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே இப்பகுதி மக்களுக்கு கிடைத்து வந்தது.

இதனால் 17 நாட்களுக்கு ஒருமுறை 1/2 மணி நேரம் மட்டும் ஒரு குடும்பத்திற்கு பத்து குடம் குடிநீர் கிடைத்து வந்தது. இந்த குடிநீர் பற்றாக்குறையினால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், மழை இல்லாத காரணத்தினால் எங்கள் பகுதியில் 7 போர்வெல்களில் கிடைத்து வந்த சப்பை தண்ணீரும் இப்பொது கிடைப்பது இல்லை.

இந்த கடுமையான குடிநீர் பிரச்சனையை தீர்க்க போதுமான பில்லூர் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...