கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நாளை துவக்கம்

ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. கடைசி இரண்டு ஆண்டுகளாக இந்த மாநாடு நாக்பூர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டு இம்மாநாடு கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.



மேலும், இந்த பிரதிநிதிகள் குழு சந்திப்பின் போது, பொதுச்சௌலாளர் உள்ளிட்டவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். கடந்த மூன்று ஆண்டுகளும் இக்கூட்டத்திலேயே இப்பொருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை எட்டிமடை அமிர்த விஸ்வ வித்யாலயத்தில் நாளை துவங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 1500 மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் உள்ள 11 மண்டலங்கள் மற்றும் 42 மாகாணங்களில் தமிழ்நாடு வடக்கு மற்றும் தெற்கு தமிழ்நாடு என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் இருந்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். 

இந்நிகழ்வின் போது பல்வேறு துறைகளின் கீழ் பணியாற்றி வரும் இவ்வமைப்பினர் தங்களது அனபவங்கள் குறித்தும், அடுத்தகட்ட இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்படும். இதில் நாட்டில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், அழிந்துவரும் மற்றும் பற்றாக்குறையான இந்திய பாரம்பரிய காளையினங்களை மேம்படுத்துதள் குறித்த கட்டுரை தொகுப்புகளும், விளங்கங்களும் இம்மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்படவுள்ளது. 

இம்மாநாட்டினை தற்போதைய தலைவர் மோகன் மதுக்கர் பகவத் பங்கேற்று மாநாட்டினை துவக்கிவைப்பார் என எதிர்பாக்கப்படுகிறது. 

மேலும், இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேவையாற்றி வரும் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...