கோவை சூலூர் அருகே இரண்டு தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை - சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ்

கோவை சூலூர் அருகே இரண்டு தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு சென்று விடுவேன் என அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த சூலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக கட்சியை சேர்ந்த கனகராஜ் இருந்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சூலூர் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியில் ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த கல்குவாரியில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கனகராஜ் நேற்று மாலை ஆய்வு செய்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனகராஜ், கல்குவாரியில் அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு முறையாக ஆய்வு நடத்தவில்லை என குற்றம்சாட்டினார். இந்த கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழக்க வேண்டியிருக்கும் என கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள நான் வேறு அணிக்கு சென்றுவிடுவேன் அல்லது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் எனவும் தெரிவித்தார். 

மேலும் இருவர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனில் எதற்கு எனக்கு பதவி என கேள்வி எழுப்பிய அவர், வேறு அணிக்கு சென்றலாலும் சென்றுவிடுவேன் எனவும், எதை பற்றியும் எனக்கு கவலையில்லை எனவும் கனகராஜ் தெரிவித்தார். ஏற்கனவே 135 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிட்ட நிலையில், மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பகிரங்கமாக வேறு அணிக்கு சென்றுவிடுவேன் என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...