உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேலப்பநாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சர்தார் வேலப்ப நாயக்கருக்கு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குருவப்ப நாயக்கனூரைச் சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேலப்பநாயக்கர். இவர் 1942 ல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார். இதன் காரணமாக ஒரு வருடம் வேலூர் சிறையிலும், இரண்டு ஆண்டுகள் அலிபரி சிறையிலும் சிறை தண்டனை அனுபவித்தார்.

அதைத் தொடர்ந்து நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 1949 ம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ம் தேதி காலமானார். அவரது தியாகம் மற்றும் நினைவை போற்றும் வகையில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சர்தார் வேலப்ப நாயக்கருக்கு உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. குருவப்பநாயக்கனூர், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பிலும் சர்தார் வேலப்பநாயக்கர் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.



அந்த வகையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.



நிகழ்வுக்கு உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழுதுணைத் தலைவர் சண்முகவடிவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் தி. செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜனார்த்தனன் துவக்க உரையாற்றினார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முத்துக்குமார், அபிராமி செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...