பாலம் பணியை விரைந்து முடிக்க நகராட்சிக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள, பாலம் கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் மந்தமாக நடைபெறும் பணிகளை முடுக்கிவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சி ஆர்.ஆர், தியேட்டர் ரோடு, குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு, செக்கு வீதியில் சாக்கடை கால்வாய் தோண்டப்பட்டு, பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் இருந்தது.

அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல், வேறு வழியாக சுற்றிச் செல்லும் நிலை காணப்பட்டது.மேலும், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கடும் துர்நாற்றம் வீசியதால், கால்வாய் அருகே கடை வைத்து இருப்போர் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த, 10 நாட்களுக்கு முன், செக்கு வீதியில் பாலம் கட்டுவதற்காக ரோடு தோண்டப்பட்டது. இவ்வழியாக வாகனங்கள் செல்லாமல் இருக்க, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் மந்தமாக நடப்பதால், இவ்வழியாக செல்ல வேண்டிய வாகன ஓட்டுநர்கள், பல்லடம் ரோடு வழியாக சுற்றிச் செல்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்தி முடித்து, போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...