மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள்- பொதுமக்களிடம் கேட்டறிந்த கோவை ஆணையர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌, தார்சாலை பணிகள்‌ உள்ளிட்ட வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவு.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வெள்ளலூரில்‌ ரூ.591.14 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ குறிச்சி குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்‌ ஒருபகுதியாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ‌ சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து,



அதன்‌ செயல்பாடுகள்‌ குறித்து கேட்டறிந்து, பணியை விரைவில்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடாந்து, தெற்கு மண்டலம்‌ வெள்ளலூர்‌ குப்பை கிடங்கு வளாகத்தில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள்‌ கிருமிநாசினி தெளிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னர்‌, வார்டு எண்‌.99க்குட்பட்ட வெள்ளலூர்‌ பகுதியிலுள்ள அற்புதம்‌ நகரில்‌ பாதாள சாக்கடை கழிவுநீர்‌ உந்து நிலையத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, வார்டு எண்‌.990க்குட்பட்ட அற்புதம்‌ நகா்‌ பகுதியில்‌ (NSMT) நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ்‌ ரூ.46.33 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சுமார்‌ 1.54 கிலோ மீட்ட தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள தார்சாலையினை மாநகராட்சி ஆணையாளர்‌நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னா்‌, அற்புதம்‌ நகர்‌ மற்றும்‌ இந்திரா நகர்‌ பகுதிகளில்‌ வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுவரும்‌ பணிகள்‌ குறித்து நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம்‌ நேரில்‌ கேட்டறிந்தார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கோயம்புத்தார்‌ மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ பாதாள சாக்கடைத்திட்டப்பணிகளின்‌ ஒருபகுதியாக வடவள்ளி மற்றும்‌ சோமையம்பாளையம்‌ பகுதிகளில்‌ பாதாள சாக்கடை கழிவுநீர்‌ உந்து நிலையம்‌ அமையவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ இ.ஆ.ப., நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டலத்தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ பிரரம்‌ ஆனந்த்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய செயற்பொறியாளர்‌ தமிழ்ச்செல்வன்‌, உதவி பொறியாளாகள்‌ மதியழகன்‌, கீதாதேவி, மாநகராட்சி செயற்பொறியாளா்கள்‌ இளங்கோவன்‌, சுந்தாராஜன்‌, கனகராஜ்‌, உதவி பொறியாளா்கள்‌ சரண்யா, சபரி, மண்டல சுகாதார அலுவலர்‌ ஆண்டியப்பன்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அலுவலாகள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...