மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள்- பொதுமக்களிடம் கேட்டறிந்த கோவை ஆணையர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌, தார்சாலை பணிகள்‌ உள்ளிட்ட வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவு.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வெள்ளலூரில்‌ ரூ.591.14 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ குறிச்சி குனியமுத்தூர்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகளில்‌ ஒருபகுதியாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ‌ சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ சிவகுரு பிரபாகரன்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து,



அதன்‌ செயல்பாடுகள்‌ குறித்து கேட்டறிந்து, பணியை விரைவில்‌ முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌.



அதனைத்‌ தொடாந்து, தெற்கு மண்டலம்‌ வெள்ளலூர்‌ குப்பை கிடங்கு வளாகத்தில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள்‌ கிருமிநாசினி தெளிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னர்‌, வார்டு எண்‌.99க்குட்பட்ட வெள்ளலூர்‌ பகுதியிலுள்ள அற்புதம்‌ நகரில்‌ பாதாள சாக்கடை கழிவுநீர்‌ உந்து நிலையத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, வார்டு எண்‌.990க்குட்பட்ட அற்புதம்‌ நகா்‌ பகுதியில்‌ (NSMT) நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ்‌ ரூ.46.33 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சுமார்‌ 1.54 கிலோ மீட்ட தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள தார்சாலையினை மாநகராட்சி ஆணையாளர்‌நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னா்‌, அற்புதம்‌ நகர்‌ மற்றும்‌ இந்திரா நகர்‌ பகுதிகளில்‌ வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுவரும்‌ பணிகள்‌ குறித்து நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம்‌ நேரில்‌ கேட்டறிந்தார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கோயம்புத்தார்‌ மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ பாதாள சாக்கடைத்திட்டப்பணிகளின்‌ ஒருபகுதியாக வடவள்ளி மற்றும்‌ சோமையம்பாளையம்‌ பகுதிகளில்‌ பாதாள சாக்கடை கழிவுநீர்‌ உந்து நிலையம்‌ அமையவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ இ.ஆ.ப., நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டலத்தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ பிரரம்‌ ஆனந்த்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய செயற்பொறியாளர்‌ தமிழ்ச்செல்வன்‌, உதவி பொறியாளாகள்‌ மதியழகன்‌, கீதாதேவி, மாநகராட்சி செயற்பொறியாளா்கள்‌ இளங்கோவன்‌, சுந்தாராஜன்‌, கனகராஜ்‌, உதவி பொறியாளா்கள்‌ சரண்யா, சபரி, மண்டல சுகாதார அலுவலர்‌ ஆண்டியப்பன்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அலுவலாகள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...