நாளை திறப்புவிழா காண்கிறது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம்: முதலமைச்சர் பங்கேற்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக அவ்வளாகத்தில் காலியாக இருந்த இடம் ஒதுக்கப்பட்டு, அதில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், புதிய கட்டிடத்திற்கா சுமார் 20.18 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்றன. 

கட்டிடம் முழுதாக கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் தமிழக அரசியல் காரணங்களால் திறப்புவிழா நடத்த காலதாமதமானது.  இந்த நிலையில், நாளை புதிய கட்டிடம் திறக்கப்ப்ட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  நாளை காலை 10:30 மணிக்கு நடைபெற இருக்கும் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அவருடன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், தமிழக அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 



விழா முடிந்ததும் கொடீசியா அரங்கத்திற்கு செல்லும் முதலமைச்சர், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளை துவங்கி வைப்பதோடு, 6 ஆயிரத்து 200 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட் உதவிகள் வழங்க உள்ளார்.

முதலமைச்சர் கோவை வருகையை ஒட்டி கோவை தொழில் முனைவோர் சங்கங்களின் சார்பில் முதலமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...