கோவையில் தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, பேதி

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகில் கிருஷ்ணம்மாள் தனியார் மகளிர் கல்லூரியின் விடுதியில் சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.


கோவை: மாணவிகளின் உடல்நிலை பிரச்சனைக்கு விடுதியில் வினியோகிக்கப்பட்ட சுகாதரமற்ற தண்ணீர் தான் காரணமாக என சுகாதார மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகில் கிருஷ்ணம்மாள் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கான விடுதி ஹோப்ஸ் சிக்னல் அருகே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் விடுதியில் மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே, சுமார் 30 மாணவிகள் விடுதியின் சார்பிலேயே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடனே விடுதி திரும்பினர்.

லேசான பாதிப்பு என்பதால் மாணவிகள் சிகிச்சை பெற்று அனைவரும் நலமுடன் விடுதி திரும்பி விட்டதாகவும், தண்ணீரில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக இருக்கலாம் என்பதால் மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், கல்லூரியில் முறையாக சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை உறுதி செய்கிறோம் என கல்லூரி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், சம்மந்தப்பட்ட கல்லூரியில் சுகாதாரத்துறை மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். ஆய்வின் முடிவிலேயே குடிநீரில் ஏற்பட்ட மாசு தொடர்பான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வரும் 20ம் தேதி வரை ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற உள்ளதாகவும், கல்லூரியில் நேரடி வகுப்புகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை எல்லாம் முடிந்து மாடல் தேர்வுகள் நடைபெற உள்ளதாக கூறபடுகிறது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...