பல்லடம் அருகே கோவிலுக்கு வந்தவரின் ஆம்னி வாகனம் திருட்டு - காரை திருடி செல்லும் சிசிடிவி வெளியீடு

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் பெருமாள் கோவிலுக்கு வந்தவரின் ஆம்னி வாகனம் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: சிசிடிவி காட்சிகளை வைத்து ஆம்னி வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் செஞ்சேரிமலை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். விவசாயியான இவர் நேற்று அவிநாசிபாளையத்தில் உள்ள ராமசாமி பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு பூஜைக்கு தனது குடும்பத்துடன் ஆம்னி வாகனத்தில் வந்துள்ளார். திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனது ஆம்னி வாகனத்தை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் சென்று விட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது ஆம்னி வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



சம்பவம் குறித்து சதீஷ்குமார் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து ஆம்னி வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் சதீஷ்குமாரின் காரை யாரோ ஒரு நபர் சின்னூர் பிரிவு சாலையில் ஓட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.



சிசிடிவி காட்சிகளை வைத்து ஆம்னி வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...