நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் - கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரசிகர்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களை கௌரவப்படுத்தும் விதமாக மூத்த ரசிகர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் இயக்கம் சார்பில், சிவாஜி கணேசன் அவர்களின் 95வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோவை காந்தி பார்க் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவாஜி சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற செயலாளர் எம்எல் கான் அவர்கள் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டார். சிவாஜி கணேசனின் அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி புகழ்ந்து பேசினார்கள். சிவாஜி கணேசனின் ரசிகர்களை கௌரவப்படுத்தும் விதமாக மூத்த ரசிகர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.



பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை மற்றும் பண உதவி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவாஜி செல்வகுமார், ராஜகோபால், புஷ்பராஜ், கண்ணன், கிருஷ்ணவேணி, சிவாஜி லோகு, ராதாகிருஷ்ணன் மற்றும் சிவாஜியின் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...