தாராபுரம் அரசு கல்லூரியில் இலக்கிய மன்ற விழா - மாணவர்கள் ஆர்வம்

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


 திருப்பூர்: மனித வாழ்க்கையில் மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில துறை சார்பில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் பேராசிரியர் ரா. சிவசாமி வரவேற்று பேசினார்.



முத்தூர் கருப்பணன் மாரியப்பபன் கல்லூரியின் ஆங்கில துறை உதவிப் பேராசிரியர் அ.அமிர்தலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மொழி-வாழ்க்கை இயக்கியார் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மனித வாழ்க்கையில் மொழி மற்றும் இலக்கியத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

முன்னதாக இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கிய மாணவி மா.தனலட்சுமி ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இரண்டாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவிகள் செ.அஸ்வினி, ரா.தீபிகா ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர்.

இறுதியாக முதலாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி மகமுதா இர்பானா நன்றி கூறினார்.

ஆங்கிலத் துறை கெளரவ விரிவுரையாளர்கள் ர.ஹர்ஷ் தபே, கார்த்திகேயன், போ.சுதாகர் மற்றும் ம.சந்தியா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...