மனநலத்தை மேம்படுத்த இயற்கையுடன்‌ தொடர்பில்‌ இருங்கள்‌ - உலக மனநல தினத்தை முன்னிட்டு சத்குரு அறிவுரை

உலக மனநல தினத்தையொட்டி, பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும்‌, ஆரோக்கியமாக வாழவும்‌ இயற்கையுடன்‌ தொடர்பிலிருப்பது என சத்குரு கூறியுள்ளார்‌.


கோவை: மனநோய்களால்‌ அவதிப்படும்‌ குழந்தைகளை விளையாட்டிலும்‌ இசையிலும்‌ ஈடுபடுத்த வேண்டும்‌ என்று சத்குரு அறிவுரை வழங்கியுள்ளார்.

உலக மனநல தினம்‌ இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில்‌, பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும்‌, ஆரோக்கியமாக வாழவும்‌ இயற்கையுடன்‌ தொடர்பிலிருப்பது என சத்குரு கூறியுள்ளார்‌. எளிய முறையில்‌ மனநலனை மேம்படுத்தி கொள்வதற்கு சத்குரு அவர்கள்‌ சில ஆலோசனைகளையும்‌ வழங்கியுள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ கூறுகையில்‌ "இன்றைய உலகில்‌ செயலுக்கும்‌ புத்திக்கும்‌ ஒதுக்கப்பட்டுள்ள சக்தி பெரும்பாலும்‌ பயன்படுத்தப்படாமல்‌ போவதால்‌, எல்லாவிதமான மன நோய்களும்‌ மனச்சோர்வும்‌ ஏற்படுகிறது. எனென்றால்‌ உணர்ச்சியளவில்‌ போதுமான அளவு தங்களை வெளிப்படுத்தாமலும்‌ உடலை வருத்தாமலும்‌ இருந்தால்‌ மனச்சோர்வில்‌ ஆழ்வது இயல்பானது. எனவே, மனநோய்களால்‌ அவதிப்படும்‌ குழந்தைகளை விளையாட்டிலும்‌ இசையிலும்‌ ஈடுபடுத்த வேண்டும்‌.

கணினி, மொபைல்‌ உள்ளிட்ட சாதனங்களால்‌ ஏற்படக்கூடிய எந்திரத்தனமான வாழ்கையில்‌ இருந்து விடுபட்டு இயற்கையுடன்‌ தொடர்பில்‌ இருக்கும்‌ பழக்கத்தை அதிகரித்துக்‌ கொள்ளுங்கள்‌. குறிப்பாக நீர்‌, ஒளி, மண்‌ ஆகியவற்றுடன்‌ தொடர்பில்‌ இருப்பதன்‌ மூலம்‌ உங்களுடைய மனம்‌ மற்றும்‌ உடல்‌ ஆரோக்கியத்தை சுலபமாக மேம்படுத்த முடியும்‌.

நீங்கள்‌ செய்யும்‌ தொழிலுக்கு ஏற்ப உங்கள்‌ உணவு முறையை மாற்றி அமைத்துக்‌ கொள்ளுங்கள்‌. மன ஆற்றலையும்‌ சமநிலையையும்‌ மேம்படுத்தும்‌ உணவை அதிகம்‌ எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. உதாரணத்திற்கு, காபி குடிப்பதை குறைத்துக்‌ கொண்டு வெள்ளை பூசணி ஜூஸ்‌, தேன்‌ போன்ற நேர்மறை பிராண சக்தி கொண்ட உணவை அதிகம்‌ எடுத்து கொள்ளுங்கள்‌. பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்கும்‌ வழிமுறையை பின்பற்றுங்கள்‌" என சத்குரு கூறியுள்ளார்‌.

மேலும்‌, இது தொடர்பாக “X" தளத்தில்‌ அவர்‌ வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்‌ “நீங்கள்‌ உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுர் தியாக மற்றும்‌ ஆற்றல்‌ ரீதியாக சமநிலையுடன்‌ இருந்தால்‌ உங்கள்‌ உட்சபட்ச திறனுடன்‌ உங்கள்‌ வாழ்கையை நடத்துவீர்கள்‌.

சமநிலை தான்‌ மிக முக்கிய அம்சம்‌. சமநிலையற்ற தன்மை என்பது மோசமான ஆரோக்கியத்தை குறிக்கும்‌. சமநிலை என்பது தான்‌ ஆரோக்கியம்‌. உடல்ரீதியாக, மன ரீ தியாக மற்றும்‌ உணர்வு ரீதியாக நீங்கள்‌ ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும்‌ என்றால்‌, சமநிலை அவசியம்‌.” என கூறியுள்ளார்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...