மாநகராட்சி வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பை துண்டித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 8 வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு 48-ல் அமரர் ஜீவா பிரதான சாலையில் வசித்து வரும் பிரான்சிஸ் சேவியர், நிலுவைத் தொகையாக சொத்து வரி ரூ.11,010 மற்றும் வார்டு 84-ல் நாடார் தெருவில் வசித்து வரும் ராஜமாணிக்கம் நிலுவைத் தொகையாக சொத்து வரி ரூ.6,862 மற்றும் குடிநீர் கட்டணம் ரூ.27,740 ஆகியவை செலுத்தாததால் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின் பேரில் அவர்களது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து, வார்டு 45-ல் கண்ணுசாமி கவுன்டர் தெருவில் வசிக்கும் சாந்தாமணி நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.15,753, வார்டு 48-ல் அமரர் ஜீவா பிரதான சாலையில் வசிக்கும் கே.பி.குஞ்ராமன் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.14,815, வார்டு 49-ல் பொங்கியம்மாள் தெருவில் வசிக்கும் மனோரஞ்சிதம் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.9,397 ஆகியவற்றை செலுத்தாததாலும், வார்டு 53-ல் தனலட்சுமி நகரில் வசிக்கும் என்.பழனிச்சாமி குடிநீர் கட்டணம் ரூ.8,489, வார்டு 53-ல் ஆவாரம்பாளையம் சாலையில் வசிக்கும் வேணுகோபால் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.4,366 மற்றும் வார்டு 54-ல் விவேகானந்தா சாலையில் வசிக்கும் சேமியல் நாடார் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.5,220 ஆகிய வரிதாரர்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தக் கோரி நோட்டீஸ் வழங்கியும், வரிகள் செலுத்தாத காரணத்தினால் மேற்படி வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோவை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...