மாநகராட்சி வரி செலுத்தாததால் குடிநீர் இணைப்பை துண்டித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் 8 வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு 48-ல் அமரர் ஜீவா பிரதான சாலையில் வசித்து வரும் பிரான்சிஸ் சேவியர், நிலுவைத் தொகையாக சொத்து வரி ரூ.11,010 மற்றும் வார்டு 84-ல் நாடார் தெருவில் வசித்து வரும் ராஜமாணிக்கம் நிலுவைத் தொகையாக சொத்து வரி ரூ.6,862 மற்றும் குடிநீர் கட்டணம் ரூ.27,740 ஆகியவை செலுத்தாததால் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின் பேரில் அவர்களது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து, வார்டு 45-ல் கண்ணுசாமி கவுன்டர் தெருவில் வசிக்கும் சாந்தாமணி நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.15,753, வார்டு 48-ல் அமரர் ஜீவா பிரதான சாலையில் வசிக்கும் கே.பி.குஞ்ராமன் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.14,815, வார்டு 49-ல் பொங்கியம்மாள் தெருவில் வசிக்கும் மனோரஞ்சிதம் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.9,397 ஆகியவற்றை செலுத்தாததாலும், வார்டு 53-ல் தனலட்சுமி நகரில் வசிக்கும் என்.பழனிச்சாமி குடிநீர் கட்டணம் ரூ.8,489, வார்டு 53-ல் ஆவாரம்பாளையம் சாலையில் வசிக்கும் வேணுகோபால் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.4,366 மற்றும் வார்டு 54-ல் விவேகானந்தா சாலையில் வசிக்கும் சேமியல் நாடார் நிலுவைத் தொகையாக குடிநீர் கட்டணம் ரூ.5,220 ஆகிய வரிதாரர்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தக் கோரி நோட்டீஸ் வழங்கியும், வரிகள் செலுத்தாத காரணத்தினால் மேற்படி வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோவை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...