மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நான்கு மாதங்களுக்குப் பின் ஈர நெஞ்சம் அறக்கட்டளையால் குடும்பத்தினருடன் ஒப்படைப்பு

கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோவை, சரவணம்பட்டி சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதி பொதுமக்களால் மீட்கப்பட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டார்.



அப்பெண்ணை தொடர்ந்து பராமரித்து வந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை அளித்துவந்தனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் புலி வளம் என்னும் பகுதியை தெரிவித்துள்ளார். அதன்படி புலிவளம் குறித்து விசாரணை மேற்கொண்ட அறக்கட்டளையினர் அந்தப்பகுதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது என கண்டறிந்தனர். 

அதனைத்தொடர்ந்து, திருவாரூர் காவல்நிலையத்திற்கு தொடர்புகொண்டு தெரிவித்ததைத் தொடர்ந்து, காணாமல் போனவர் பட்டியல் உள்ளிட்டவற்றை சோதனை செய்த காவல்துறையினர், அப்பெண் சத்யா என்பவரது தாய் ராஜேஸ்வரி என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கண்டறிந்தனர்.



இதைத்தொடர்ந்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு வந்த சத்யா, நான்கு மாதங்களுக்குப் பின் தனது தாயைக்கண்டு நெகிழ்ச்சியுற்றார். தொடர்ந்து தாயும், மகளும் கட்டித்தளுவி மகிழ்ச்சியில் அழுத காட்சி அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.

இதுகுறித்து சத்யா தெரிவிக்கையில், நான்கு மாதங்களுக்கு முன்பு எனது தாய் திருவாரூரில் காணாமல் போனார். நாங்கள் பல்வேறு பகுதியில் அவரை தேடினோம். எங்கும் காணவில்லை. தற்போது கோவையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளையால் எனது தாய் மீண்டும் என்னுடன் இணைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை' என தெரிவித்தார். 

இதனையடுத்து, ராஜேஸ்வரியின் சில ஆவணங்களை சரிபார்த்து உறுதிசெய்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் மீது கூடுதல் கவனம்  செலுத்தி பாதுகாக்குமாறு அறிவுரைகூறி மகள் சத்யாவுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...