தாராபுரம் நகரில் வாய்க்காலில் கழிவுகளை கொட்ட வேண்டாம் - பொதுமக்களுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

தாராபுரம் நகரில் உள்ள அமராவதி ராஜ வாய்க்காலில் நகர மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை கொட்டுவதால் அடைப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: ராஜவாய்க்கால்களில் குப்பை கொட்டும் நபர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுகொண்டனர்.

தாராபுரம் நகரில் உள்ள அமராவதி ராஜ வாய்க்காலில் நகர மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை கொட்டி வருவதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மதகுகள் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் உள்ளன என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாராபுரம் நகரின் மத்திய பகுதியின் வழியாக அமராவதி ராஜ வாய்க்கால் ஓடிக் கொண்டுள்ளது. இதன் மூலம் ராஜ வாய்க்காலில் இருந்து விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் சிலர் தங்கள் வீட்டுக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை ராஜ வாய்க்காலில் கொட்டி செல்கின்றனர். இதனால் ராஜ வாய்க்காலில் மதகுகளில் தண்ணீர் செல்லும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டு விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் சீராக செல்லாமல் தடைபட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதேபோல ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மக்காத பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பாட்டில்கள் விவசாய விளை நிலத்தை பாதிக்கின்றன. எனவே மக்கள் இதனை கருத்தில் கொண்டு ராஜ வாய்க்காலில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் ராஜவாய்க்கால்களில் குப்பை கொட்டும் நபர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...