வால்பாறை கலை கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

வால்பாறை கலை கல்லூரியில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் போக்குவரத்து வட்டார அலுவலக போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.


கோவை: வாகனங்களை ஓட்டும் பொழுது வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் உட்பட சாலை போக்குவரத்து விதிகள் பற்றி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு கலைக் கல்லூரியில் சுமார் 2000திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதற்கு போக்குவரத்து வட்டார அலுவலக போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் கல்லூரியில் சாலை விதிமுறைகளை பற்றி விழிப்புணர்வு கருத்து அரங்க கூட்டம் நடைபெற்றது.

இதில் மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சாலையில் வாகனங்களை ஓட்டும் பொழுது வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். 18 வயதிற்கு மேல் நிரம்பியவர் வாகனம் ஓட்டுநர் உரிமை வைத்திருக்க வேண்டும். சாலை விதியில் விதிகளை கடைபிடிக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது கட்டாய தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் ஏற்றக்கூடாது.

வேக கட்டுப்பாடு அவசியம். ஒலி எழுப்பும் இடத்தில் ஒலி எழுப்ப வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. வாகனங்களை விளையாட்டாக ரேஸ் போன்றவை வைக்கக்கூடாது. இவைகள் அனைத்தும் உயிருக்கு கேடாக விளைவிக்கும் போன்ற விதிமுறைகளை பற்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...