தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் - பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பல்லடத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் போல் நடைபெறாமல் இருப்பதால்தான் தற்போது சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்களை நியமிப்பது குறித்து பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.



இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பெற வேண்டும்.அதற்கு எவ்வாறு பணி செய்ய வேண்டும். மக்களிடத்தில் அதிமுக ஆட்சியில் செய்த நலத்திட்ட உதவிகளை தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, கூட்டணி குறித்து கழக பொதுசெயலாளர் முடிவு செய்வார். அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு மாதமும் துறை வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதில் காவல்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதில் எந்த காவல் நிலையம் பகுதியில் அதிக குற்றங்கள் நிகழ்கிறது என கண்டறிந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டறிந்து அதன் மூலமாக அப்போதைய முதல்வரிடம் எடுத்துரைத்து சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் தற்போது இதுபோன்ற ஆய்வு கூட்டங்கள் சரியாக நடைபெறததால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தேவையான நடவடிக்களை பொதுச்செயலாளர் ஆலோசனையின்படி மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், பரமசிவம் மற்றும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பகுதி செயலாளர், உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...