திருமூர்த்தி அணையில் புதர் மண்டி காணப்படும் பூங்கா - சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை அருகே புதர் மண்டி காணப்படும் திருமூர்த்தி அணை பூங்காவை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணை வளாகத்தில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர்.



குறிப்பாக இப்பகுதியில் பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி மலை அவணலிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.



இந்த நிலையில் திருமூர்த்தி அணைப்பகுதியில் கடந்து சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பூங்கா தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றன.

பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த விலங்குகள் மற்றும் இருக்கைகள் உபகரணங்கள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.

பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுவதால் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ள காரணத்தால் பூங்காவை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...