கொடிசியா பகுதியில் தனியார் பள்ளி அமைத்த வேகத்தடையால் ஒரே நாளில் பல்வேறு விபத்துகள் நடைபெற்றது கண்டிபிடிப்பு

கோவை கொடிசியா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரகாந்த் என்பவர் விழுந்து உயிரிழந்த அதே நாளில் அங்கு ஏற்பட்ட பல்வேறு விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: அனுமதியின்றி தனியார் பள்ளி நிர்வாகம் அமைத்த வேகத்தடையால் ஒரே நாளில் பல்வேறு விபத்துக்கள் நடத்துள்ளது என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

கோவை கொடிசியா பகுதியில் உள்ள கீதாஞ்சலி என்ற தனியார் பள்ளி அருகில் அனுமதியின்றி பள்ளி நிர்வாகத்தால் போடப்பட்ட வேகத்தடையில் வெள்ளை கோடுகளை குறிப்பிடாத காரணத்தினால், கடந்த வெள்ளிகிழமை (29.09.2023) இரவு அவ்வழியாக வந்த சந்திரகாந்த்(26) என்ற இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் அந்த வேகத்தடையை முற்றிலுமாக அகற்றினர். மேலும் அனுமதியின்றி மாநகராட்சி பகுதிகளில் வேக தடைகளை யாரும் அமைக்க கூடாது என மாநகராட்சி நிர்வாகம் தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சந்திரகாந்த் விழுவதற்கு முன்பு அதே நாளில்(29.09.2023) அந்த வேகத்தடையால் பல்வேறு வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். அவர்களும் வேகத்தடை அங்கு அமைக்கப்பட்டு இருப்பதை உணராமலும் வெள்ளை கோடு இல்லாததால் நிலை தடுமாறி விழுந்தவர்களே ஆவர். தற்பொழுது அவ்விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...