உடுமலை ராணுவ பள்ளியில் தூய்மை பணிகள் - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் தூய்மை பாரத திட்டத்தின் நடைபெற்ற தூய்மை பணிகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை பேட்டையில் உள்ள ராணுவ பள்ளியில் தூய்மை பணிகள் தூரிதமாக நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் உள்ள சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டும் தூய்மை இந்தியா பணி பாரத திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது.



இப்பணியில் அமராவதி பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், இதர பணியாளர்கள், ஆண்டிய கவுண்டனுர் ஊராட்சி நிர்வாகம் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அமராவதி வனச்சரக பணியாளர்கள் அனைவரும் இணைந்து அமராவதி நகர் மற்றும் அமராவதி அணை சுற்றி உள்ள இடங்களை தூய்மை செய்தனர்.



இந்நிகழ்வில் அமராவதி நகர் சைனிக் பள்ளியின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னெல் தீபு, பள்ளியின் துணை முதல்வர் விங் கமாண்டர் தீப்தி உபாத்யாயா, அமராவதி வனச்சரகர் சுரேஷ், ஆண்டிய கவுண்டனுர் பஞ்சாயத்து தலைவர் ரா மோகனவல்லி, துணைத்தலைவர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடர் நிகழ்வாக கடந்த பத்து நாட்கள் தூய்மையை வலியுறுத்தும் பல்வேறு நிகழ்வுகள் சைனிக் பள்ளி மாணவர்களால் நடத்த பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...