ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இன்று உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிப்பு

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் குடியுரிமை நுகர்வோர் கிளப் சார்பில் அக்கல்லூரியின் விவேகானந்தா ஹாலில் இன்று உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் குடியுரிமை நுகர்வோர் கிளப் ஒருங்கிணைப்பாளர் எம்.மகேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் இந்நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார். 

கோவை பிஐஎஸ் விஞ்ஞானி வி.ரமேஷ் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பிஐஎஸ் எவ்விதமான செயல்களை மேற்கொள்ள வேண்டும், மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்வோர் சங்க பொதுச் செயலாளர் என்.பிரதீப் குமார், நுகர்வோர் உரிமைகள் மற்றும் குடியுரிமை நுகர்வோர் கிளப்பின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.



நிரைவாக, வர்த்தகத்துறை துணை பேராசிரியர் எஸ்.பாலாஜி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...