கவுண்டச்சிபுதூரில் தீ விபத்து - இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறையினர்

கவுண்டச்சிப்புதூர் பகுதியில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தீயிட்டு கொளுத்தியபோது, அதில் இருந்து பரவிய தீயால் விவசாயி வைத்திருந்த வைக்கபோர் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயை இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர்.


திருப்பூர்: பெரும் விபத்து ஏற்படும் முன்பே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை உடனடியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள ராம்நகர் குடியிருப்பு பகுதியில் மத்தியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் இந்தியன் ஆயில் பெட்ரோல் டீசல் விற்பனைநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒட்டிய பகுதி முழுவதும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. விவசாய நிலங்களும் உள்ளன.

அங்கு கால்நடைகளுக்கு உண்டான தீவனங்கள் வைக்க போல் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடுகள் மேய்ந்து வருகின்றன. இந்த நிலையில் கவுண்டச்சிப்புதூர் பஞ்சாயத்து பகுதியில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தூய்மைப்படுத்தி குப்பைகளை அப்புறப்படுத்தாமல் துப்புரவு பணியாளர்களே தீட்டு வந்தனர்.



அப்போது அங்கு அடித்த காற்றில் அந்த தீ பரவி அங்குள்ள விவசாயி வீட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கபோர் திடீரென தீப்பற்றி எரிந்து அதிகளவில் தீ பரவியதால் அங்குள்ள பொதுமக்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து தாராபுரம் தீயணைப்பு துறை தொலைபேசி மூலம் தகவல் அளித்தனர்.



தகவலின் அடிப்படையில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அங்குள்ள தீயினை சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து வந்தனர்.

அங்குள்ள பொதுமக்கள் அந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை உடனடியாக மாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...