ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கோவையில் தமிழக முதலமைச்சர் பேட்டி

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை வேட்பாளராக அறிவித்து இருப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் தெரிவித்தார்.

சேலத்தில் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் இன்று விமானம் மூலம் சென்னை செல்கின்றார். அதற்காக கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பதால், 100 சதவிகித வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தெரிவித்தார்.

இந்த முடிவு கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தாதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அதிருப்தி என யாருமே சொல்லவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...