நிலத்திற்கு இழப்பீடு தர வேண்டும் - தாராபுரத்தில் 43வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் கோனாரிபட்டி அருகேயுள்ள நல்லதங்கள் அணைக்கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீட்டு கேட்டு தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 43வது நாளில் மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.



திருப்பூர்: நிலத்திற்கு இழப்பீடு வழங்காவிட்டால் விரைவில் சென்னையில் உள்ள தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறும் என நல்லத்தங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோனாரிபட்டி அருகே நல்லதங்காள் நீர் பிடிப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டுவதற்காக 97 விவசாயிகள் 850 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளனர். இதற்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றம் வரை சென்றும் இதுவரை இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.



43வது நாளான நேற்று மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் விரைவில் சென்னையில் உள்ள தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...