வால்பாறையில் மாலை தொடங்கி இரவு வரை கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் இரவு நேரத்திலும் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.



கோவை: விநாயகர் சதூர்த்தி திருவிழாவையொட்டி இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் 108 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.



அவ்வாறு பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த, சிலைகள் எஸ்டேட் பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.



அப்போது வால்பாறையில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு வால்பாறை பிரதான சாலை வழியாக ஆடல், பாடல், நடனமாடி சிலைலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.



இரவு 9 மணி அளவில் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள, ஆற்றில் கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...