உடுமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி பஞ்சலிங்க அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



திருப்பூர்: பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவதால், கோவில் ஊழியர்களும், வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று இடைவிடாமல் பெய்தது.



இதன்காரணமாக பல மாதங்களாகவே வறண்டு காணப்பட்ட பஞ்சலிங்க அருவியில் திடீர் நீர்வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் பின்புறம் உள்ள கன்னிமார் கோயில் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.



நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் இப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...