தாராபுரம் குண்டடத்தில் அண்ணாமலை யாத்திரை - மாற்றுத்திறனாளிக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்ட்டடத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணமலை மாற்றுதிறனாளிகள் 30 பேருக்கு இலவச சக்கர சைக்கிள் உள்ளிட்ட நல திட்டங்களை வழங்கினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள புதிய நவக்கொம்பு பகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரைக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார்.

அரவிந்த் தோட்டத்திற்கு வந்த அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு 30 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்களை இலவசமாக வழங்கினார்.



மேலும் பொதுமக்களுக்கு நல திட்டங்களை வழங்கி சிறப்புரைத்தார்.

நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை தாங்குகினார்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் பொன். ருத்ரகுமார், அமெரிக்கவாழ் தமிழர் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய செயலாளர் நாட்டு துரை, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் உலகநாதன், ருத்ராவதி பேரூராட்சி கிழக்கு ஒன்றிய பாஜக மகளிர் அணி தலைவர் கண்ணம்மாள், நான்காவது வார்டு கவுன்சிலர் பாலதண்டபாணி, 5 வது வார்டு கவுன்சிலர் கௌரி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...