கோவை சிறையில் சிறை காவலர்களுக்கும் கைதிளுக்கும் மோதல் - 4 காவலர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோவை மத்திய சிறைச்சாலையில் வால் மேடு பிளாக் என்ற பிளாக்கில் சிறை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 சிறை காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: சிறைக்காவலர்களுக்கும்-கைதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் மோதலில் ஈடுபட்ட 7 கைதிகளும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பிளேடை கொண்டு உடல்களை கீறி கொண்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மத்திய சிறைச்சாலையில் வால் மேடு பிளாக் என்ற பிளாக்கில் சுமார் 600 கைதிகள் உள்ளனர். அவர்களை கண்காணிக்க வார்டர்கள், சிறை காவலர்கள் உள்ளனர். இந்நிலையில் சிறை காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 சிறை காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் தினேஷ்(எ) மண்டை தினேஷ், அய்யனார், அழகர்சாமி, ஹரிஹரன், கிஷோர்குமார், உதயகுமார், அரவிந்த் என்ற 7 கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே ஏதோ காரணத்தால் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறியது.



இதில் ராகுல், மோகன்ராஜ், பாபுஜான், விமல்ராஜ் ஆகிய 4 சிறை காவலர்களுக்கு காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே அந்த 7 கைதிகளும் சிறை வளாகத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி பிளேடை கொண்டு உடல்களை கீறி கொண்டு போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து இதர சிறை காவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கைதிகள் 20-25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...