துடியலூரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு - 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்

கோவை துடியலூரில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் செயற்கையாக வெட்ட குளத்தில் போட்டு கரைக்கப்பட்டன.



கோவை: 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் செயற்கையாக வெட்டப்பட்ட குளத்தில் 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூர் சுற்றுப்பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளக்கிணர் பகுதியில் மாநகராட்சி சார்பில் செயற்கையாக குளம் வெட்டி அதில் 60 லாரிகள் மூலம் தண்ணீர் விட்டும் 2 போர்வெல் மூலம் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் விட்டும் சுமார் 15 லட்சம் லிட்டர் தண்ணீரில் காவல் துணை ஆணையர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவையோட்டி கோவை துடியலூர் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக 300க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.



அதனை தொடர்ந்து விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.



இதில் இந்து முன்னணி சார்பாக விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பி.ஜே.பி கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார். விசர்சன ஊர்வலத்தை பி.ஜே.பி கட்சி மாவட்ட துணை தலைவர் செந்தூர் முருகேசன் தொடங்கி வைத்தார்.



கேரளா செண்டைமேளம், டோல் மற்றும் ஜமாப்புடன் ஊர்வலமாக வந்து சிலைகளை கரைத்தனர்.



அதில் இந்து முன்னணி சார்பாக 265 விநாயகர் சிலைகளும், இந்துமக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பர்சத், அனுமன் சேனா, பாரத் சேனா, ஹிந்து பாரத் சேனா, அகிலபாரத இந்து மகா மற்றும் பொதுமக்கள் சிலைகள் என 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

மேலும் வெள்ளக்கிணர் குட்டையில் நீர் இல்லாத காரணத்தால் மாநகராட்சி சார்பில் செயற்காக குளம் வெட்டி அதில் 60 லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டும், 2 போர்வெல் மூலம் ஒரு வாரம் நேரடியாக தண்ணீர் விட்டும்.



சுமார் 15 லட்சம் லிட்டர் தண்ணீரில் சிலைகள் கரைக்கபட்டன.



கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



மாநகராட்சி சார்பாக 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விநாயகர் கரைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...