மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பத்தின் நிலை என்னை? - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் இன்று ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டனர்.



திருப்பூர்: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு முதற்கட்டமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் விண்ணப்பம் செய்து எந்த ஒரு குறுந்தகவலும் பெறாதவர்கள் மற்றும் பணம் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளம் மூலமாக தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனையொட்டி தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் இன்று ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டனர்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...