அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு நல்ல புத்தி வழங்க கோரி பல்லடத்தில் பாரத மாணவர் பேரவையினர் நூதன வேண்டுதல்!

சனாதன ஒழிப்பு குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோருக்கு நல்ல புத்தி வழங்க கோரி பல்லடத்தில் பாரத மாணவர் பேரவை மற்றும் இந்து சேவகன் அமைப்பு சார்பில் தோப்புக்கரணம் போட்டு நூதன வேண்டுதலில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோருக்கு நல்ல புத்தி வழங்க கோரி பாரத மாணவர் பேரவை மற்றும் இந்து சேவகன் அமைப்பு சார்பில் நூதன வேண்டுதலில் ஈடுபட்டனர்.



நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் பேரவை மற்றும் இந்து சேவகன் அமைப்பு ஆகியோர் இணைந்து சமத்துவ விநாயகர் சிலையினை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர்.



சிறப்பு பூஜைகளோடு தொடங்கப்பட்ட சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான வியாபாரிகள், மாணவர் பேரவை மற்றும் இந்து சேவகன் அமைப்பினர் கலந்து கொண்டு சனாதன தர்மத்திற்கு எதிராகவும் சனாதனத்தை ஒழிப்போம் என பேசி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோருக்கும் இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கும் நல்ல புத்தியை கொடு என வேண்டுதல் வைத்து விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன வழிபாடு நடத்தினர்.

சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ச்சியாக பேசி வருவது இந்து தர்மத்திற்கு எதிரானது எனக்கூறி விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு நூதன வழிபாட்டில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...