கோவில் நுழைவாயில் போல அலங்காரம் செய்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

கோவை தேர் நிலை திடல் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில் கோவில் நுழைவாயில் அலங்கார பந்தல் அமைத்து சிலைக்கு அருகே யானை முகம் போன்ற தூண்களுடன் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கோவில் நுழைவாயில் போன்று அலங்கார பந்தல் அமைத்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.



கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை தேர் நிலை திடல் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு கோவில் நுழைவாயில் போன்று அலங்கார பந்தல் முகப்பு அமைக்கப்பட்டு, ராஜ கணபதி அலங்காரத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.



மேலும் விநாயகர் சிலைக்கு இரு புறங்களிலும் யானை முகம் கொண்ட தூண்கள் போல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.



வழக்கமாக தகரத்தினால் ஆன பந்தல்கள் அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்து மக்கள் கட்சியினர் கோவில் போன்றே நுழைவாயிலை அமைத்து அதற்குள் விநாயகர் சிலையை வைத்து இரு புறங்களிலும் யானை முகங்கள் கொண்ட தூண்களை அமைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருவது அவ்வழியாக செல்லும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...