பிரதமர் மோடியில் 73வது பிறந்தநாளைமுன்னிட்டு, உடுமலை நகர பாஜக சார்பில் கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருப்பூர்: உடுமலையில் உள்ள சிறுபான்மை அணி அலுவலகத்தில் பாரத பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
உடுமலையில் நகர பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடியின் 73 -வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் பூஜை, அன்னதானம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாஜக சார்பில் பாரத பிரதமர் மோடியின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் உடுமலை அண்ணா குடியிருப்பு குப்தா லேஅவுட் பகுதியில் முதியோர் மாவட்ட சிறுபான்மை அணி ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் உடுமலையில் உள்ள மாரியம்மன் கோவில், பிரச்சன கோவில், ஆஞ்சநேய கோவில், ஐஸ்வர்யா நகர் விநாயகர் கோவில், உடுமலை திருப்பதி கோவில் சிறப்பு வழிபாடு மேற் கொள்ளப்பட்டது.
பின்னர் திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பாரத பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் உடுமலையில் உள்ள சிறுபான்மை அணி அலுவலகத்தில் பாரத பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பிஜு ஆண்டனி, மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர் ஆரோக்கிய மேரி, திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் வடுகநாதன், உடுமலை நகர பொதுச்செயலாளர்கள் தம்பிதுரை, சீனிவாசன், நகரத்துணைத்தலைவர், மணிவண்ணன் கண்ணப்பன், கணேஷ், தொழில்துறை நகர செயலாளர் ஹரிபாபு இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுரு, இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரதீப், நகர செயலாளர் சிவசங்கர், செல்வராஜ், முருகேசன், நகர பொருளாளர் ஐயப்பன், ஓபிசி அணி பாலு,நலத்திட்டத்தலைவர் திருஞானம் தரவு தள மேலாண்மை நகர தலைவர் கோபிநாத், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் குருசாமி, நடராஜ், பூத் கமிட்டி நிர்வாகிகள் சிவராஜ், முத்து கோபாலகிருஷ்ணன், சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.