கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிரதமர் விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில், பாரதப் பிரதமர் விஸ்வகர்மா திட்டம் துவக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற கருப்பொருளில் பாரத பிரதமர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும், இதில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் மிக முக்கியமானது எனவும் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்தார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில், பாரதப் பிரதமர் விஸ்வகர்மா திட்டம் துவக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்வில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், கோயம்புத்தூர் மாவட்ட துணை ஆட்சியர் பி.சுரேஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கைவினை கலைஞர்கள், விஸ்வகர்மா சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் பேசுகையில், பாரதப் பிரதமரின் பிறந்தநாள் அன்று துவங்கப்பட்டுள்ள பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்கள் பிணையில்லா கடன் உதவி பெற்று தொழில் வளர்ச்சி பெற முடியும் எனவும், இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டம் பெரும் பயன் அடையும் எனவும் தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பேசுகையில், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற கருப்பொருளில் பாரத பிரதமர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும், இதில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் 18 வகையான தொழில்கள் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, உதவித்தொகை வழங்கப்படுவதாகவும், பயிற்சி முடித்த பின்பு ரூபாய் 15 ஆயிரம் மதிப்பிலான தொழில் உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ரூபாய் 2 லட்சம் வரை பினையில்லா கடன் உதவி வழங்கப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் தரமான பொருட்கள் உற்பத்தி செய்வதோடு, அதனை சந்தைப்படுத்துவதற்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு தொழில் முன்னேற்றம் அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.

சுதந்திரம் அடைந்த பின்பு ஆங்கிலேயர்கள் வெளியேறி விட்டாலும், நமது நாட்டின் பாரம்பரிய தொழில் மற்றும் கலைகளை ஊக்குவிக்காமல் இருந்து வந்த நிலையில், பாரத பிரதமரின் முயற்ச்சியில் பாரம்பரியமிக்க கைவினை தொழில்கள் இன்று மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் திட்டமாக இத்திட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், துவாரகாவிலிருந்து பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நேரலை செய்யப்பட்டது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...