தந்தை பெரியார் பிறந்த நாள் - கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாட்டுக்கறி விருந்து

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.



கோவை: தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாட்டுக் கறி பிரியாணி மற்றும் மாட்டுக்கறி சுக்கா வழங்கப்பட்டது.



தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியாரிய அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் படம் மற்றும் சிலைகளுக்கு பெரியாரிய அமைப்பினர், ஆதரவாளர்கள், பெரியாரிய சிந்தனையாளர்கள் அரசியல் கட்சியினர் என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் இந்நாளில் சனாதனத்தை மறுப்போம் சமத்துவத்தை ஏற்போம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்த அனைவருக்கும் மாட்டுக் கறி பிரியாணி மற்றும் மாட்டுக்கறி சுக்கா வழங்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...