கோவையில் 3 நாட்கள் நடைபெற்ற சோதனையில் நகை, பணம் பறிமுதல் - பாரத ஸ்டேட் வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைப்பு

கோவை கட்டுமான நிறுவனத்தில் வடவள்ளி, சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனி இடங்களில் 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தை கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் கருவூலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.



கோவை: மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை வங்கியில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

கோவை கட்டுமான நிறுவனத்தில் வடவள்ளி சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனி இடங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது அதில் சோதனையின் போது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது.

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் காட்டப்படாத பணம் தங்க நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.



சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் கருவூலத்தில் ஏழு அதிகாரிகள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உதவியுடன் ஒப்படைத்தனர். இதில் எவ்வளவு பணம் நகை உள்ளது என்பது இதுவரை வருமான வரித்துறை அதிகாரிகள் வெளிப்படுத்த வில்லை.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...