காவல்துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளரும் பிரபல திரைப்பட இயக்குனருமான ஆர்.வி. உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



கோவை: ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறிய திமுக தற்போது 27 மாதங்களுக்குப் பிறகு அதனை வழங்குவதால் ஒவ்வொரு மகளிரின் வங்கி கணக்கிலும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக தலைமை கழக பேச்சாளரும் பிரபல திரைப்பட இயக்குனருமான ஆர். வி . உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,



அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவைக்கு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் எந்த ஒரு மக்கள் நல திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முறையாக செயல்படுத்தியிருந்தால் 2கோடியே 30 லட்சம் மகளிருக்கு இந்த நிதி வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால் பல்வேறு விதிமுறைகளை விதித்து தற்போது ஒரு கோடி பேருக்கு மட்டுமே வழங்கியுள்ளனர். ஆட்சிக்கு வந்த உடன் தருவதாக கூறிய முதலமைச்சர் ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகிய பிறகு இத்திட்டத்தை கொண்டு வந்ததால் ஒவ்வொருவருக்கும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

கோவை குனியமுத்தூர் காவல் சரக உதவி ஆணையர் ரகுபதிராஜா திமுக நிர்வாகியை போல் செயல்படுகிறார். அவர் காக்கி சீருடையை கலைந்து கரை வேட்டி கட்டி கொள்ளட்டும். வெட்கமில்லாமல் திமுக விற்கு அடிபணிந்து கிடக்கிறார். அதிமுக கொடி கட்ட அனுமதிக்காத அவர் திமுக அமைச்சர் வந்தபோது கொடி தோரணம் பிளக்ஸ் பேனர் போன்றவற்றிற்கு அனுமதியளித்தார்.

கோவையில் தான் அதிக செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. காவல்துறைக்கு அதிமுக தான் பாதுகாப்பு அளித்த்து. விரைவில் ஆட்சி மாறும் அப்போது காட்சியும் மாறும் என்பதால் காவல்துறை நடுநிலையாக செயல்பட வேண்டும்.

போகிற போக்கை பார்த்தால் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வந்துவிடும் என தோன்றுகிறது. எப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் என்று எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...