பல்லடத்தில் அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர அதிமுக சார்பில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் எம்ஜிஆர் சாலையில் நடைபெற்றது.



திருப்பூர்: 1984 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் சிலை மீண்டும் புரனமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர அதிமுக சார்பில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் எம்ஜிஆர் சாலையில் நடைபெற்றது.



1984 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் சிலை மீண்டும் புரனமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ பரமசிவம்,பொங்கலூர் ஒன்றிய செயலாளர் யு.எஸ்.பழனிச்சாமி, மற்றும் அதிமுக மகளிர் அணி, இளைஞரணி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,



திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆட்சி அதிமுக ஆட்சியில் செய்த பணிகளை தான் திரும்ப செய்து கொண்டிருக்கிறார்கள். புதிதாக எந்த திட்டங்களும் திருப்பூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. இந்த இரண்டரை வருட காலத்தில் திமுக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, மீதமுள்ள இரண்டரை ஆண்டு காலத்திலும் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் போவதில்லை என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...