மகளிர் உரிமைத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கவில்லை - பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அண்ணாவின் திருஉருவ படத்திற்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



கோவை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்காமல் முதல்வர் ஏமாற்றிவிட்டார் என பொள்ளாச்சி ஜெயராமன் புகார் தெரிவித்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அண்ணாவின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.

பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது,



மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக கூறி|ய முதலமைச்சர் 30 மாத காலம் கழித்து ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு என்பதைப் போல மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இருந்த தமிழக தாய்மார்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளார்.

எந்த திட்டத்தை செய்தாலும் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் செயல்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் கொரானா நிவாரணத் தொகை, பொங்கல் சிறப்பு தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் செயல்படுத்தப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் எத்தனை குடும்பத் தலைவிகள் உள்ளார்கள். ஒரு குடும்பத்திலிருந்து திருமணம் ஆகி வேறு வீட்டுக்கு சென்றவர்கள் தனி குடும்பம் தான். இரண்டு பெண்கள் இருந்தாலும் தனித்தனி குடும்பங்கள் தான். மொத்தமாக தமிழக மக்களை ஏமாற்றும் இந்த திட்டத்தால் குடும்பப் பெண்கள் சரியான சவுக்கடி கொடுப்பார்கள்.

இத் திட்டத்தின் மூலம் ஸ்டாலின் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற முறையை கையாளப்பட்டது. திமுக கட்சியிருக்கு மட்டும் பார்த்து பார்த்து வழங்கப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...