மருத்துவர்கள், செவிலியர்களுக்கான போதை மீட்பு மற்றும் தாய்சேய் மனநலம் பேணும் பயிற்சி - அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கி வைப்பு!

கோவை மாவட்டம் வால்பாறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் தாய்சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பின்னர் மனநலம் பேணுவதற்கான பயிற்சி கையேட்டையும் வெளியிட்டார்.



கோவை: வால்பாறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான போதை மீட்பு மற்றும் தாய்சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் தாய் சேய் மனநலம் பெறுவதற்கான பயிற்சி துவக்கி வைக்கப்பட்டு பயிற்சி கையேடு வெளியீட்டு விழா நடைபெற்றது.



இந்த விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு தமிழக முழுவதும் உள்ள சுகாதார மருத்துவமனை மற்றும் துணை சுகாதார மருத்துவமனை ஆகியவற்றில் போதை மீட்பு மற்றும் பின் பேறு கால தாய் சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியை வால்பாறையில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,



தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. 110 அறிவிப்புகளும் ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. வால்பாறை பகுதியில் 3 அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வருகிறது. அறிவிப்பு எண் 61 அறிவிப்பு 62 அறிவிப்பு எண் 63 இந்த நிகழ்ச்சியில் செயல் பாட்டுக்கு வருகிறது.

மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மனநலம் பெறுவதற்கு அதற்கான கையேடு வெளியிடுவதும். ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் பின் பேறுகால தாய் சேய் மனநல பேணுவதற்கான பயிற்சியை துவக்கி வைத்தல் பயிற்சி கையேடு ஆகியவற்றிற்கான பயிற்சி கையேடு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

போதை பொருள்கள் கஞ்சா போன்ற தீய வஸ்துக்கள் அளிப்பதற்கு தமிழக அரசு முழு முயற்சி எடுத்து காவல்துறையினர் அளித்து வருகின்றனர். இதனை காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் போதை பழக்கம் இல்லாத தமிழ் நாடாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இதை வலியுறுத்தி இதற்காக சுகாதார துறை மூலம் மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளருக்கும், துணை சுகாதார ஆய்வாளருக்கும், கடைநிலை சுகாதார பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை வால்பாறை பகுதியில் முதல் துவக்கப்பட்டு தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

வால்பாறையில் துவங்கப்பட்ட இந்த போதை மிட்பு பயிற்சி 2286 ஆரம்ப சுகாதார பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இந்த பயிற்சியை நேரடியாக போதை பழக்கத்துக்கு 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 22.4 சதவிகிதம் புகையிலை மதுப்பழக்கத்தில் ஆளாகியுள்ளதாக தகவல் வருகிறது.

இந்த பயிற்சியின் மூலம் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களை சுகாதார அலுவலகம் மற்றும் துணை சுகாதார அலுவலகம் உள்ள இடங்களில் அலுவலர் பணியாளர்கள் குணப்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



வால்பாறை பகுதியில் ஒன்பது கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்து இன்னும் ஓர் இரு இரண்டு மாதங்களில் பணி நிறைவடைந்து முதலமைச்சர் மருத்துவமனையை திறந்து வைப்பார் என்று கூறிய அவர், மருத்துவமனையில் ஆய்வும் மேற்கொண்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...